புதன், 18 பிப்ரவரி, 2009

பருப்பு உருண்டைகுழம்பு

தேவையான பொருட்கள் ;-
பொடியாக நறுக்கிய வெங்கயாம் : அரை கப்
தக்காளி : 1
மல்லி தூள் : இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் : இரண்டு டீ ஸ்பூன்
புளி -தேவையான அளவு
உப்பு :தேவையான அளவு

அரைக்க :
கடலை பருப்பு : அரை கப்
துவரம் பருப்பு : அரை கப்
வர மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்தை கொள்ளவும் .சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 15 நிமடம் வைத்து அவித்து எடுக்கவும்.

துருவிய தேங்காய் : அரை கப்
(தேங்காவை தனியாக அரைத்து கொள்ளவும் )

தாளிக்க:
சோம்பு : கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிது
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை ;-
வானொலியில் எண்ணெய் விட்டு சோம்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும் . பிறகு புளிதண்ணீர் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்க விடவும் .பிறகு அரைத்த தேங்காவை சேர்க்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .

மீன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் : அரை கப் (தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் தான் தேவை )
துருவிய தேங்காய் : அரை கப்
பொட்டு
க்கடலை : கால் கப்
பச்சை மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
றிவேப்பிலை : சிறிது
நல்லேஎண்ணெய்: இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு கப் பொரி த்து எடுக்க
உப்பு :தேவையான அளவு

செய்முறை
தேங்காய்,மீன்துண்டுகள்,சோம்பு,கசகசா,மஞ்சள்த்தூள்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,பொட்டுக் கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் நல்லேஎண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும் .இதே முறையை பயன்படுத்தி கறி,கோழி ,இறால் கோலா உருண்டைகளுக்கு பின்பற்றவும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்:-
பச்சை அரிசி: ஒரு கப்
புழுங்கல் அரிசி :ஒரு கப்
உளுந்து : அரை கப்
உப்பு :தேவையான அளவு
தண்ணீர் :தேவையான அளவு

(பச்சை அரிசி, புழுங்கல் அரிசி ,உளுந்து,உப்பு ,எல்லாவற்றையும் ஊறவைத்து அரைத்து கொள்ளவும் .அந்த மாவை ஒரு நாள் இரவு முழுதும் வெளியில் வைத்து புளிக்க வைக்கவும் )

இனிப்பு பணியாரம்

பணியார மாவுடன் சரக்கரை ஏலக்காய் பொடி கலந்து குழிப்பணியார சட்டியில் வார்த்து எடுக்கவும் .

கரப்பணியாரம்

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து தாளித்து வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மாவுடன் சேர்த்து கரைத்து வார்த்து எடுக்கவும் .தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ் .

மரவள்ளிகிழங்கு ரொட்டி

தேவையான பொருட்கள் :-
மரவள்ளிகிழங்கு - 1(தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சர்க்கரை : அரை கப்
பச்சை அரிசி : ஒரு கப்
துருவிய தேங்காய் : அரை கப்

செய்முறை :-
மரவள்ளிகிழங்கு,தண்ணீர் ,சர்க்கரை,ஊறவைத்த பச்சை அரிசி,துருவிய தேங்காய்,சிறிது உப்பு எல்லாத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும் .தோசை கல்லில் தோசை போல் வார்த்து எடுக்கவும் .

திங்கள், 16 பிப்ரவரி, 2009

கேரளா அப்பம்

தேவையான் பொருட்கள் :-
பச்சை அரிசி : 3 கப்
வேகவைத்த சோறு : 1 கப்
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் :தேவையான அளவு
தேங்காய் பால் : தேவையான அளவு
ஈஸ்ட் :1 டீஸ்பூன் (சிறிது சுடுதண்ணீரில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும் )
சர்க்கரை : 2டீஸ்பூன்

செய்முறை :
ஊறவைத்த பச்சை அரிசி,வேகவைத்த சோறு, இரண்டையும் தேங்காய் பால் ,தண்ணீர் சேர்த்து ,அரைத்து கொள்ளவும் .அரைத்தவுடன் அதில் கரைத்து வைத்து இருக்கும் ஈஸ்ட்டை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும் .மாவை ஒரு நாள் இரவு வெளியில் வைத்தால் நன்கு புளித்து விடும் .மறுநாள் காலையில் உப்பு பசும் பால் சேர்த்து கரைத்து ஆப்ப சட்டியில் வார்த்து எடுக்கவும் .மாவு ரொம்ப தண்ணியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் .

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:-
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
பெருங்காயம் :சிறிதளவு
தக்காளி : 1
புளி : சிறிது

அரைக்க
மிளகு : 2டீஸ்பூன்
சீரகம் :1டீஸ்பூன்
பூண்டு:இரண்டு பல்

(மூன்றையும் அரைத்து கொள்ளவும் )

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் புளி,தக்காளி இரண்டையும் கரைத்து எடுத்து கொள்ளவும். அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,அரைத்த மிளகு சீரகம் ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் .வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை, ,வரமிளகாய்,பெருங்காயம் தாளித்து கொள்ளவும். பிறகு புளி தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.

அன்னாசிப்பழ ரசம்

தேவையான பொருட்கள்:-
அண்ணாசி பழம் துண்டுகள்: அரை கப்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
சீராக பொடி: 1 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு

செய்முறை:
ஒரு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் அண்ணாசி துண்டுகளை போட்டு 5நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு அந்த தண்ணீரில் தக்காளி,வேகவைத்த துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,சீராக பொடி ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் .வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.