திங்கள், 16 பிப்ரவரி, 2009

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
சீராக பொடி: 1 டீஸ்பூன்
மிளகு பொடி : 1 டீஸ்பூன்
தக்காளி : 3(சுடுதண்ணீரில் போட்டு தோல் உறித்துக்கொள்ளவும்)
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு
எலும்பிச்சை சாறு :இரண்டு தேக்கரண்டி

செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் தக்காளியை கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,மிளகு பொடி ,சீராக பொடி ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் . வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு எலும்பிச்சை சாற்றை ஊற்றி மல்லித்தலை தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக