தேவையான பொருட்கள் :
கறி : அரை கிலோ(கறியை நன்கு அலசி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும் )
பெரிய வெங்காயம் : 1 கப்
நறுக்கிய தக்காளி : 1 கப்
மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்
மல்லித்தூள் : அரை ஸ்பூன்
சீரகத்தூள் : அரை ஸ்பூன்
சோம்புத்தூள்: அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் :5
உப்பு : தேவையான அளவு
தேங்காய் பால் : அரை கப்
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 5
கசகசா : கால் ஸ்பூன்
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்தஇஞ்சிபூண்டுவிழுது,மஞ்சள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர் ,தேங்காய் பால்,சேர்த்து நன்கு சுருளக்கிளறி இறக்கவும்.கறி வேக வைத்த தண்ணீர் அதிகம் இருந்தால் கொஞ்சத்தை எடுத்து விடவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக