புதன், 18 பிப்ரவரி, 2009

பருப்பு உருண்டைகுழம்பு

தேவையான பொருட்கள் ;-
பொடியாக நறுக்கிய வெங்கயாம் : அரை கப்
தக்காளி : 1
மல்லி தூள் : இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் : இரண்டு டீ ஸ்பூன்
புளி -தேவையான அளவு
உப்பு :தேவையான அளவு

அரைக்க :
கடலை பருப்பு : அரை கப்
துவரம் பருப்பு : அரை கப்
வர மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்தை கொள்ளவும் .சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 15 நிமடம் வைத்து அவித்து எடுக்கவும்.

துருவிய தேங்காய் : அரை கப்
(தேங்காவை தனியாக அரைத்து கொள்ளவும் )

தாளிக்க:
சோம்பு : கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிது
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை ;-
வானொலியில் எண்ணெய் விட்டு சோம்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும் . பிறகு புளிதண்ணீர் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்க விடவும் .பிறகு அரைத்த தேங்காவை சேர்க்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .

1 கருத்து: