தேவையானவை:
சீரக சம்பா அரிசி - 2 கப்,
வெந்தயக்கீரை - ஒரு கப்
தக்காளி:1
வெங்காயம் - தலா 1 (நறுக்கிக் கொள்ளவும்),
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்,
உப்பு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி -பூண்டு விழுது சேர்த்துக் வதக்கவும். பிறகு உப்பு,வெந்தயக்கீரை, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து,அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வரை வைத்து பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக