தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்
கடைந்த தயிர் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி விழுது - ஒரு கப்
நறுக்கிய கேரட், உருளை, பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் கலவை - 2 கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1
தேங்காய்ப் பால் - கால் கப்
பிரியாணி இலை - 2
புதினா, மல்லித்தலை - கால் கப்
உப்பு - தேவையான அளவு.
பட்டை : 2
கிராம்பு :2
ஏலக்காய் :2
அரைக்க:
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
முந்திரி - 15.
செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு, பிரியாணி இலையைப் போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் காய்கறி கலவை, தயிர், உப்பு சேர்க்கவும். அரிசி, 4 கப் தண்ணீர், தேங்காய்ப் பால் விட்டு கொதிக்க விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும், புதினா, கொத்தமல்லி தூவி கிளறி குக்கரை மூடி, 'சிம்'மில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக