திங்கள், 16 பிப்ரவரி, 2009

கேரளா அப்பம்

தேவையான் பொருட்கள் :-
பச்சை அரிசி : 3 கப்
வேகவைத்த சோறு : 1 கப்
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் :தேவையான அளவு
தேங்காய் பால் : தேவையான அளவு
ஈஸ்ட் :1 டீஸ்பூன் (சிறிது சுடுதண்ணீரில் சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும் )
சர்க்கரை : 2டீஸ்பூன்

செய்முறை :
ஊறவைத்த பச்சை அரிசி,வேகவைத்த சோறு, இரண்டையும் தேங்காய் பால் ,தண்ணீர் சேர்த்து ,அரைத்து கொள்ளவும் .அரைத்தவுடன் அதில் கரைத்து வைத்து இருக்கும் ஈஸ்ட்டை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும் .மாவை ஒரு நாள் இரவு வெளியில் வைத்தால் நன்கு புளித்து விடும் .மறுநாள் காலையில் உப்பு பசும் பால் சேர்த்து கரைத்து ஆப்ப சட்டியில் வார்த்து எடுக்கவும் .மாவு ரொம்ப தண்ணியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக