தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,
காளான் - ஒரு பாக்கெட்,
தக்காளி : 2
வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - கால் கப்
பிரியாணி இலை - 1,
பட்டை - :2
கிராம்பு:2
ஏலக்காய் - :2
பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தலை - கால் கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி ஊற விடவும். குக்கரில், வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா, மல்லித்தலை, சுத்தம் செய்த காளான் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். உப்பு, அரிசி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடவும். பிரஷர் வந்தவுடன் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக