தேவையானவை :
அரிசி 1- கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மிளகு -11/2 டீஸ்பூன்கள்
சீரகம் - 11/2 டீஸ்பூன்கள்
முந்திரிப்பருப்பு - 12
இஞ்சி - சிறிதளவு
உப்பு - 11/2 டீஸ்பூன்கள்
நெய் - அரை கப்
செய்முறை :
வறுத்த பாசிப்பருப்பையும்,அரிசியையும் நன்றாகக் களைந்து கொள்ளவும்.சுமார் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து,கொதித்தபின், அரிசி,பருப்பு இவற்றைப் போட்டு,அடிக்கடி கிளறி விடவும்.பதமானபின் உப்பைப் போட்டுக் குழைய வேக விட்டு இறக்கவும்.பொடி செய்த சீரகம்,மிளகு,சிறு துண்டங்களாக நெய்யில் வறுத்த இஞ்சி,முந்திரிப்பருப்பு இவற்றை வெந்த பொங்கலில் போட்டு கையில் ஒட்டாமல் கிளறி எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக