ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

காளை கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள் :
காளை கருவாடு

சாம்பார் வெங்காயம் : 15
தக்காளி : 1

சோம்பு : 1/2 கரண்டி
வெந்தயம் : 1/2 கரண்டி,

கறிவேப்பிலை : கூடுத‌லாக‌வே

நல்ல எண்ணெய்/ஆலிவ் எண்ணெய்: கொஞ்சமா







புளி : எலுமிச்சையளவு
மல்லித் தூள் : 4 மே.கரண்டி

மிளகாய் தூள் : 2 மே.கரண்டி

(காரம் தேவைப்படுவோரர்அதற்கேற்ப: கூடுதலாக‌)

உப்பு : தேவைக்கு

(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு,கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் காளை கருவாட்டு துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் கருவாட்டை வேக விடவும். கருவாடு நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக