திங்கள், 16 பிப்ரவரி, 2009

அன்னாசிப்பழ ரசம்

தேவையான பொருட்கள்:-
அண்ணாசி பழம் துண்டுகள்: அரை கப்
கடுகு : சிறிதளவு
சீரகம் : சிறிதளவு
வர மிளகாய் :2
மஞ்சள் தூள் :கால் டீஸ்பூன்
சீராக பொடி: 1 டீஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு : கால் கப்
தக்காளி : 1
பூண்டு:இரண்டு பல் (தட்டி கொள்ளவும் )
பெருங்காயம் :சிறிதளவு

செய்முறை:
ஒரு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் அண்ணாசி துண்டுகளை போட்டு 5நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு அந்த தண்ணீரில் தக்காளி,வேகவைத்த துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கரைத்து கொள்ளவும் .அந்த கரைசலுடன் மஞ்சள் தூள் ,சீராக பொடி ,உப்பு , சேர்த்து கலக்கிகொள்ளவும் .வாணலியில் எண்ணை விட்டு கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,வரமிளகாய்,பெருங்காயம் ,பூண்டு தாளித்து கொள்ளவும். பிறகு தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மல்லித்தலை தூவி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக