ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

மட்டன் : அரை கிலோ (கறியை நன்கு அலசி மூன்று கப் தண்ணீர் ,சிறிது வெங்காயம் ,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேக விடவும் )

சின்ன வெங்காயம் : 1 கப்

நறுக்கிய தக்காளி : 1 கப்

இஞ்சி பூண்டு விழுது : இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்

உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

கல் பாசி பூ : தேவையான அளவு

பிரியாணி இலை : தேவையான அளவு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

மிளகு : கால் ஸ்பூன்

பூண்டு : ஒரு பல்

தேங்காய் -1/2 கப்
பச்சை மிளகாய்-2

பொட்டுக்கடலை -2 ஸ்பூன்

கிராம்பு : இரண்டு


(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்).

செய்முறை :

வாணலியில்எண்ணெய்விட்டு,பட்டை,கிராம்பு,வெந்தயம்,சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்,மல்லி ,மிளகாய் தூள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்து இருக்கும் கறி,கறி தண்ணீர்,அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் எல்லாவற்றையும் வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக