ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

மனத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள் :
மனத்தக்காளி வற்றல்: 4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் : 15

தக்காளி : 1

எண்ணெய் : 5 டேபிள்ஸ்பூன்
கடுகு : சிறிதளவு
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு







புளி : எலுமிச்சையளவு
சாம்பார் பொடி : 2 டேபிள்ஸ்பூன்

உப்பு : தேவைக்கு

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை ,மனத்தக்காளி வற்றல்ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி,சாம்பார் பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.குழம்பு நன்கு கொதித்தவுடன் விட்டு இறக்கவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக